Monday, October 26, 2009

ஆழமான உடலுறவு விதியை வெல்லும்

செக்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சி,புரிதல் ,சூட்சுமம் தெரிந்தால் உங்கள் வாழ்க்கையின் பாதையை /விதியை உடைத்து திருப்பலாம் , லோகாயதமாக மட்டுமல்லாது ஆத்யாத்மிகமாகவும் வாழ்வாங்கு வாழலாம் என்பதை இந்த பதிவில் விவரிக்க உள்ளேன். பொறுமையாக படித்தால் இன்றோடு உங்களை பிடித்த பீழை ஏழையாயிரும். உங்கள் தலையெழுத்தே மாறிப்போயிரும்.

இந்த படைப்போ இந்த உலகமோ , நாமோ இல்லாத காலமே கிடையாது. புனரபி மரணம் புனரபி ஜனனம். இன்று விஞ்ஞானிகள் வரையறுத்திருப்பது ஒரு பிக் பாங்க் மற்றும் ஒரு ஸ்ருஷ்டியையே. ஆனால் ஆயிரக்கணக்கான முறை இந்த படைப்பு சுருங்கி விரிந்திருக்கிறது. இதற்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. விதியற்ற விதி என்று சொல்லலாம். ஆண்டவன் என்றால் இது கடந்த காலத்தை ஆண்டவன் என்ற பொருளை தருகிறது. அப்போ இப்ப ஆள்றது யாருனு கேட்கிறிங்க இல்லியா ? நம்மை ஆள்றது வானவெளியில் நிறைந்துள்ள நம் மூதாதையரின் எண்ணங்களே.

இதை நிரூபிக்க ஒரு சின்ன சர்வே செய்யுங்க. உங்களுக்கு தெரிஞ்சு நாசமாகிப்போன 10 குடும்பங்கள் கதைய பாருங்க. அவங்க முன்னேறியதற்கான காரணங்களை பட்டியல் போடுங்க. அப்படியே ஈன நிலையிலிருந்து முன்னேறிய 10 குடும்பங்களோட பட்டியலை போடுங்க. அவங்க முன்னேற்றத்துக்கான காரணங்களை பட்டியல் போடுங்க.


கெட்டுப்போன குடும்பங்கள் முன்னேற பத்து பனிரண்டு காரணங்களே இருப்பதை போல் , வசதியான குடும்பங்கள் கெட்டு நலியவும் ஒரு பத்து பனிரண்டு காரணங்களே காரணங்களாய் அமைந்ததை பார்க்கலாம்.

நம் தலைமுறையில் வாழ்ந்து /கெட்டு செத்துப்போனவர்களுடைய எண்ணங்கள்/ஆவிகள்னு கூட வச்சிக்கலாம் .இவர்கள் தமது வமிசத்தில் அடுத்து பிறப்பவர்களின் வாழ்வுகளை அம்பயர் கணக்காய் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் கெட்டழிந்தவையும் உண்டு. வாழ்வாங்கு வாழ்ந்தவையும் உண்டு.

ஒருத்தன் நாசமா போறதுனு முடிவு பண்ணி ( இது அவன் புத்திக்கு உறைக்காது) முதலடி எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து பிச்சை எடுக்க வைக்கிறது கடந்த பிறவியில் கெட்டழிந்த ஆத்மாக்களின் எண்ணங்கள் அ மனிதர்களின்ஆவிகளே.

அதே மாதிரி ஒருத்தன் உருப்படறதுனு முடிவு பண்ணி முதலடிய எடுத்து வச்சிட்டான்னா அவனை க்ளைமேக்ஸுக்கு கொண்டு சேர்த்து வெற்றி சிகரத்தை அடைய வைக்கிறதும் அவன் வமிசத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மூதாதையரின் எண்ணங்கள் அ ஆவிகளே.

இங்கே உங்களுக்கு நல்லா புரியணுங்கறதுக்காக முன்னோர், மூதாதையரை மட்டும் குறிப்பிட்டேன். (இந்த பாதிப்பு ஜீன் களின் வழி நடக்கிறதுனு சொல்லிரலாம்) ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது வாழ்வாங்கு வாழ்ந்தவனுடைய ஆத்மாவுக்கு வசதியா எவனும் அவனோட வம்சத்துல பிறக்கலைன்னா அவன் ஆத்மா வேறு குடும்பம்/வேறு ஜாதி/வேறு மதம்/வேறு நாட்டை சேர்ந்தவைனையும் தேடிப்போயிருது.

இதையெல்லாம் படிச்சா விட்டலாச்சாரியா படம் மாதிரி இருக்கும் ஆனால் இதெல்லாம் நிஜம். ஒரு கட்டத்துல ஒரு ....ரும் தெரியாது அறியாமையில்ம்,அகங்காரத்துலயும் அழிஞ்ச நான் ( அதே ஆசாமி, அதே ஜீன், அதே படிப்பு ,அதே ஜாதகம்) சரியா 19 வயசுல பாதை மாறி (வாதைகள் பட்டு) அடுத்த 19 வயசுல படைப்பின் மர்மங்களை கூட இரண்டாம் வாய்ப்பாடு மாதிரி சொல்லமுடியுதுன்னா நான் சொன்ன தியரிக்கு இதைவிட ஆதாரம் என்ன தேவை.

என் பிறந்த தேதி 7/8/1967 இதில் உள்ள இலக்கங்களை கூட்டினா 38 வரும் . இதில் பாதி 19 . இந்த விதிய உங்க விஷயத்துல அப்ளை பண்ணி பாருங்க. உங்க முடிவை மறுமொழியா போடுங்க பார்ப்போம்.

நாம் இதுவரை இந்த பிறவியிலான நம் வாழ்க்கையை நமது முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள் பாதிக்கின்றன என்பதை பார்த்தோம்.

உங்கள் ஒட்டு மொத்த வாழ்வையும் உங்கள் பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி பல விஷயங்கள் பாதிக்கின்றன. இந்த பட்டியலில் மிக முக்கியமான அம்சத்தை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை. அதுதான் உங்கள் செக்ஸ் லைஃப். செக்ஸுக்கு அதிபதியான சுக்கிரன் ஆண்டின் பத்து மாதங்கள் உங்களுக்கு அனுகூலமாகவே இருக்கிறார். மேலும் நாம் 100 சதவீதம் பரிபக்குவமடைந்து விட்ட மகாத்மாக்கள் இல்லை. நமது ஆடைகளுக்குள் மிருகமாக வே இருக்கின்றோம். எனவே செக்ஸ் என்பது நம்மை 99 % வரை பாதிக்கிறது. செக்ஸுக்கு தகுதியான உடல் வலிமை, உள்ள் இளமை இருக்கும் வரை இந்த சதவீதம் மாறுவதில்லை.

இதை இயற்கை கொடுத்த சாபமாக பாவிப்பதைவிட சாபத்தை வரமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாமே. அர்ச்சுனனுக்கு ஊர்வசி கொடுத்த சாபம் அவனது அஞ்ஞாத வாசத்துக்கு உதவியது. அதை போல் மிருக நிலையில் உள்ள நமக்கும் 99 சதவீத பாதிப்பு வரமாக உதவ வாய்ப்பிருக்கிறது.

கண்ணதாசன் "ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்" என்று எழுதியிருப்பதை எண்ணிப்பாருங்கள். அவர் வர கவி. இயற்கையின் ரகசியங்கள் அவர் கவிதைகளில் கொட்டிக்கிடக்கின்றன. உடலுறவு எண்ணம் ஏற்பட்ட பிறகு, அ உடலுறவுக்கு இறங்கி விட்ட பிறகு முன் சொன்ன பூர்வ ஜென்ம பாப ,புண்ணியங்கள், ஜாதகம், வாஸ்து, ஜீன் கள், முன்னோர் மூதாதையரின் எண்ணங்கள் அ அவர்தம் ஆவிகள், சுற்றுப்புற சூழல் இப்படி எதுவுமே பாதிக்காத நிலை ஏற்படுகிறது.

இதற்கு காரணம் அந்த நேரத்தில் மனித மனம் ஒரு புள்ளியில் குவிவதே. இந்த உடலுறவு நேரத்தை நீட்டித்து தம்பதிகள் ஒருவரை ஒருவர் கிளர்ந்தெழச்செய்து தம் உச்சத்தை தள்ளிப்போட்டு ஆழமாக செல்லும்போது
அங்கு சக்தி வட்டம் தோன்றுகிறது.

நீளவாக்கில் ஓடும் மின்சாரத்தை விட சுற்றி சுற்றி பாயும் மின்சாரத்துக்கு சக்தி அதிகம் . மோட்டார்களிலான வைண்டிங்கை பார்த்தால் இது புரியும். மேலும் உடலுறவில் ஆழம் அதிகரிக்கும்போது எண்ணீக்கையும் நாளடைவில் குறைந்து விடும்.

இதில் ஆழ திருப்தியுற்ற தம்பதிகளின் மனம் நன்றியுணர்வால் பொங்குகின்றன. பின் கலர் டிவியா/ப்ளாக் வைட் டிவியா போன்ற அம்சங்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன. செல்ஃப் பிட்டி காணாமல் போகிறது. துக்கத்தில் இருப்பவன் அடுத்தவரை துக்கப்படுத்தி பார்ப்பான். சந்தோஷத்தில் உள்ளவன் பிறரை சந்தோஷ ப்படுத்தி பார்ப்பான். ஆழமான செக்ஸ் லைஃப், குடும்ப வாழ்க்கையையும். குடும்ப வாழ்க்கை சமூகத்தையும் மாற்றும். அரசியல் எல்லாம் பளிங்குமாதிரி ஆகிவிடும். ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அழுத்தி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகளே வன்முறையாகவும், லஞ்ச லாவண்யம்,பதவி வெறி இத்யாதியாக மாறுகிறது. வரதட்சிணை கொடுமைக்கு கூட இதுவே காரணமோ என்னவோ? எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை பணமாவது வாங்கிட்டு வா என்ற மனோதத்துவம் இதன்பின் இருக்கலாம். இல்லத்தரசிகள் கணவர்கள் ஃப்ரிட்ஜ், கலர் டிவி கேட்டு குடைச்சல் கொடுப்பதற்கு பின்னும் "எப்படியும் நீ அதுக்கு லாயக்கில்லை ..இதையாவது வாங்கிக்கொடு" என்ற மனோதத்துவம் இருக்கலாம்.

எனவே " ஆதலினால் காதல் செய்வீர்"