Thursday, November 1, 2012

அலிகளின் தேசம்

அண்ணே வணக்கம்ணே !
முக நூல்ங்கறதே வேஸ்ட் ஆஃப் டைம்ங்கற ஃபீலிங் வெளியாட்களுக்கு மட்டுமில்லை. முக நூலை பாவிப்பவர்களுக்கும் இருக்கு.

முக நூலும் ஒரு உலகம் தேன். வெளி உலகத்துல என்னெல்லாம் இருக்கோ அதெல்லாமே முக நூல்லயும் இருக்கு. ஆப்ஷன் ஈஸ் அவர்ஸ்.

நமுக்கு எது தேவையோ அதுவரைக்கும் பாவிச்சுட்டு அம்பேல் ஆயிரவேண்டியதுதேன். நிற்க. சமீப காலத்துல எங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாம 9 வருசம் குப்பை கொட்டியாச்சு.ஒய்.எஸ்.ஆர் ஆட்சி காலம் ஓவர். இப்பம் உள்ள கிரண் ரோசய்யாவை நெல்லவராக்கறதே லட்சியம்னு செயல்பட்டுக்கிட்டிருக்காரு.

இப்பம் கூட நாம கீர் அப் பண்ணலின்னா தாளி 3 ஆமிடம் கியாரண்டின்னுட்டு ஒவ்வொரு பிரிவு மக்களையும் கவர திட்டம் போட்டு ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்காரு. எதையும் சனம் நம்பறதாயில்லை. போதாக்குறைக்கு தன் ஆட்சிய தானே கியாபகப்படுத்தி காபரா படுத்திக்கிட்டு வேற இருக்காரு.

ஆமா இங்கன சந்திரபாபு ஏன் வந்தாரு? ஆங் .. இந்திய ஜனத்தொகையில 50 சதம் யூத்தாம். அதனால இந்தியாவுக்கு செமர்த்தியான எதிர்காலம் இருக்காம். அப்படீன்னு பாபு சொன்னாருங்கோ..

நம்ம பரசுராம் சார் முக நூல்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தாரு. அதை படிச்சதுலருந்து ரெம்ப டர்ராயிட்டன். இந்த 45  வயசுக்கே சனத்து  மேல நம்பிக்கை நசிஞ்சு போச்சுங்கறது வேற கதை.

எங்கெங்கு காணினும் சக்தியடான்னு  பாரதியார் பாடினாரு.ஆனால் இன்னைக்கு எங்கெங்கு காணினும் சகதியடான்னு தேன் பாடத்தோனுது. எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்குன்னு புலம்ப வேண்டியதா இருக்கு.

மவனுங்க கியாஸ் சிலிண்டர் மேட்டர்ல கூட அல்ப்பம்ங்க போல விளையாடியிருக்கானுவ. அட உடல் ஊனமுற்றவுகளுக்கு ட்ரை சைக்கிள் தந்தோம்னு பொய்க்கணக்கு எளுதியிருக்கானுவ. பெரிய மனிதர்கள் தான் அப்படின்னா சின்ன மனிதர்கள் அதுக்கு மேல.

ரேஷன் கார்டுல போலி.  கியாஸ் கனெக்சன்ல போலி. வீட்டுமனை? ஊஹூம்.. ஒருத்தனுக்கும் சுயமரியாதையே கிடையாது. சரி ஓழியட்டும் பரசுராம் சார் முக நூல்ல என்னத்தை ஷேர் பண்ணிட்டாரு..மேட்டருங்க வாங்கங்கறிங்க. அப்படித்தானே..வந்தே உட்டேன்.

இந்தியாவின் மக்கள் தொகை: 110 கோடி:

பாரதி முப்பது கோடி முகமுடையாள்னு எளுதினாரு. அப்போ 60 கோடி கைகள் இருந்திருக்கு. இப்பம்? 110X2 =220 கைகள். ஆனால் இந்த கைகள்ள எத்தீனி "உழைக்கும் கை ..உருவாக்கும் கை"ன்னு பார்த்தா வாழ்க்கையே வெறுத்து போகுது.

மொதல்ல குவான்டிட்டிய குறைக்கனும். அப்பத்தேன் குவாலிட்டி அதிகரிக்கும்.சினிமாக்காரன்ல எவனுக்கெல்லாம் ரெப்புட்டேஷன் இருக்கோ -ஃபாலோயிங் இருக்கோ அவன் கிட்டே வருமான வரியை வசூலிக்கிறதை நிப்பாட்டிட்டு கு.க பிரச்சாரத்துக்கு உபயோகிக்கனும்.குடும்ப நலத்துறைக்கு கு.க பிரச்சார மேட்டருக்கு ஒதுக்கற பணத்தை எல்லாம் மடை மாற்றி ஒரு ஸ்பெசல் ட்ரைவ் கண்டக்ட் பண்ணனும்.

வாராந்தர கு.க பிரச்சாரம்+  கேம்புகளுக்கு கு.பட்சம் ரஜினி,கமலாச்சும் வரனும்.அதிக பட்சம் வடிவேலு. ஒரு குழந்தை பிறந்து 25 வயசு வரை அரசுமானியத்தை எல்லாம் எக்ஸாஸ்ட் பண்ணி உருப்படாம போனா அரசுக்கு என்ன நஷ்டமோ அந்த தொகையை கு.க செய்துக்கற  நபருக்கு கொடுத்து ஒழிச்சுரலாம் நஷ்டமே இல்லை.

அரசாங்கம் தன் வெட்டி வேலைகளை எல்லாம் நிப்பாட்டிட்டு ஆந்திராவுல ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடியில அணைகள் கட்ட ஆரம்பிச்சதை போல நதிகளை இணைக்கும் பணியை போர்க்கால அடிப்படையில துவக்கிரனும்.

மானாவாரியா கெட்ட காரியம் செய்து - சகட்டு மேனிக்கு பெத்துப்போடற மக்கள் வாழும் நாட்டை பற்றிய ப்திவுக்கு   அலிகளின் தேசம்னு தலைப்பு வச்சிருக்கியே ராசான்னு கேப்பிக சொல்றேன்.

வாழறதே உருவாக்கத்தேன். இதுல வாரிசுகளை உருவாக்கிறது ரெம்ப சப்பை மேட்டரு. உண்மையிலயே உருவாக்கனும்னா  உழைக்கனும்.உழைக்கும் நிலையில் இல்லாத மக்கள் நிறைந்த தேசத்தை அலிகளின் தேசம்னுதேன் சொல்லோனம்.


9 கோடி ஓய்வு பெற்றவர்கள் :
இவிகள்ள ரெண்டு கேட்டகிரி.ஒன்னு சரியான வாழ்க்கைய வாழ்ந்து பாசிட்டிவ் வைப்ரேஷன்ஸை ஸ்ப்ரெட் பண்ணியபடி ஆதர்சமா வாழ்ந்துக்கிட்டிருக்கிறவுங்க .ரெண்டாவது .. தங்களோட செக்யூரிட்டிக்கு பென்ஷன் இருக்குன்னு சாடிஸ்டா மாறிப்போனவுக. இதுல மொத கேட்டகிரிய கொண்டு  ரெண்டாவது கேட்டகிரிக்கு உரிய கவுன்சிலிங் கொடுத்து தேச புனர் நிர்மாணத்துக்கு இந்த ரெண்டு கேட்டகிரியையும் நதிகளை இணைக்கும் பணியில் உபயோகிச்சுக்கனும்.

30 கோடி மாநில அரசு பணியாளர்கள்:
என்னைக்கேட்டா சோலார் ,காற்றிலிருந்து மின்சாரம் இத்யாதி மூலம் பவர் கட்டை இல்லாம பண்ணீட்டு அரசு நிர்வாகத்தை கணிணி மயமாக்கிரனும்.  இ கவர்னென்ஸ் கொண்டு வந்து   குறைஞ்ச பட்சம் 50 சதவீதம் ஊழியர்களை நதிகளை இணைக்கும் பணியில் உபயோகிச்சுக்கனும்.

17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்:

இதுலயும் பாதி வெட்டி. 50 சதவீதம் ஊழியர்களை நதிகளை இணைக்கும் பணியில் உபயோகிச்சுக்கனும்.

1 கோடி IT ஆளுங்க:
நதி நீர் இணைப்புக்கு தேவைப்படும் காசு பணத்துக்கு மத்திய அரசு பாண்டுகள் வெளியிடலாம்.  இவிக வெளி நாட்ல இருந்தாலும் சரி ,உள் நாட்ல இருந்தாலும் சரி  இவிகளோட வருமானத்துல 50 சதவீதத்தை  மேற்படி பாண்ட்ஸ்ல இன்வெஸ்ட் பண்ணியே ஆகனும்னு சட்டம் கொண்டு வரலாம்.

இந்தியாவில் இருக்கிறவுகளை கணிணிமயம் மற்றும் இ கவர்னென்ஸுக்கு உபயோகிச்சுக்கலாம்.

25 கோடி பள்ளில படிப்பவர்கள்:
படிப்புன்னா இன்னைக்கும் மனப்பாடம்ங்கற நினைப்புத்தான் இருக்கு. தகவல் தொழில் நுட்ப புரட்சிக்கு பிறகு மனப்பாடம்ங்கறதே தேவையில்லாத மேட்டர் ஆயிருச்சு. மாணவர்களை ஜஸ்ட் ஒரு ரூ.15+10 (ரைட்டிங் சார்ஜுங்ணா) மதிப்புள்ள சி.டியா மாத்தி மார்க்கெட்ல விட்டுர்ர டுபாகூர் வேலையெல்லாம் இனி கூடாது.

முதல்வர் தனிப்பிரிவுக்கு நாம அனுப்பிய யோசனைகளில்  சோலார் பவர் மேட்டரை சுட்டு அறிக்கையா வெளி வந்த  கதை தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதுலருந்து ரெண்டு யோசனைகளை இங்கே தந்தே ஆகனும்.


//பள்ளிகள்,கல்லூரிகள் அனைத்தும் டைம் ஷேர் முறையில் வேலை செய்யவேண்டும். வேலை நேரமல்லாத நேரத்தில் தனியார் அங்குள்ள இன்ஃப்ரா ஸ்ட் ரக்சரை வாடகை செலுத்தி பயன் படுத்திக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். (அதிக பட்ச காஷன் டெப்பாசிட்/ பேங்க் கியாரண்டி வசூலித்துக்கொண்டு)

8.அதற்கு முன்பாக பள்ளிகள்/கல்லூரிகளின்   அமைப்பை பொருத்து காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை போதிய சூரிய வெளிச்சம், காற்று வரும்படி ஆல்ட்டர் செய்யவேண்டும். ஷாபிங்க் காம்ப்ளெக்ஸ், மரம் நடுதல் , காற்றாலை அமைத்தல், சோலார் பவர் யூனிட் ஸ்தாபித்தல் இத்யாதி மார்கங்கள் மூலம் கூடுதல் வருவாய்க்கு வழி செய்யவேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் கூடுதல் தளம் (ஸ்டேர்) அமைக்கலாம். அது ஆடும் பல்லாயிருந்தால் இடித்து தள்ளி புதிய கட்டிடமே கட்டலாம். BOT முறையில் ( Build-Operate-Transfer) புதிய கட்டிடம் கட்டுவதாயின் அண்டர் கிரவுண்டில் பார்க்கிங் ஏற்பாடு செய்யலாம். இந்த ஒப்பந்தம் டைம் பவுண்டடாக இருக்கவேண்டும். காலம் தவறினால் (புயல் மழை தவிர்த்து இதர காரணங்களால் ஒப்பந்த காரரின் சொத்து ஜப்தி செய்யப்படவேண்டும்)//

மேற்படி ப்ராசஸ்ல பெற்றோர் சங்கம் மட்டுமல்லாது மாணவர்களும் டைரக்டா இன்டராக்ட் ஆகறதுக்கு வழி செய்யனும்.

ஒன் டு ஃபைவ் க்ளாஸஸ் கட் பண்ணா நாறீரும்.அதனால அப்பர் ப்ரைமரி ஸ்டடீஸ்லருந்து - இஞ்சினீரிங் இத்யாதி வரை எல்லாம் பள்ளி,கல்லூரி,பல்கலை கழகத்தையும் மூடித்தொலைச்சுட்டு மேற்படி ப்ராசஸை முழு வீச்சில் துவக்கலாம். இடைக்காலத்தில் உலக அளவில் உள்ள க்ல்வியாளர்களை வரவழைச்சு புதிய பாடதிட்டங்களை,போதனா முறைகளை  வகுக்கலாம்.

பையன் படிப்பை முடிச்சு வெளிய வர்ரச்ச சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருக்கனும்.வாழ்க்கை மேக்கப் இல்லாத நடிகை முகம் மாதிரி பயமுறுத்திரப்படாது.

இன்னம் 4 கேட்டகிரி வெற்று மனிதர்கள் இருக்காய்ங்க.அவிகளை என்ன பண்றதுன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

டேட்டா உபயம்: முக நூலில் பரசுராம்