Thursday, December 13, 2012

சந்திரனுடன் பேட்டி: 3

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி தொடர்கிறது. சந்திரன் 6 முதல் 10 வரையிலான கேள்விகளுக்கு இன்னைக்கு பதில் சொல்லப்போறாரு

6.உங்களுக்கு எந்த கிரகமும் பகையில்லைங்கறாய்ங்களே அது இன்னா கணக்கு?

எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட்னு ஒரு விதியிருக்கு தெரியுமோ? உ.ம்  அக்னி முக தொழில் செய்வோர் செவ்வாய்.  எந்த தொழில் எப்படிப்பட்டதுன்னு "அறிவால்" யோசித்தால் இது நல்லது -இது கெட்டதுன்னு சொல்லிரலாம் .அதே போல  "அறிவால்" யோசித்தால் இவன் நெல்லவன் -இவன் கெட்டவன்னு கரீட்டா சொல்லிரலாம்.

ஆனால்   மனசால ரோசிச்சா விபச்சாரத்தை கூட தப்பான தொழில்னு சொல்லிர முடியாது. ஒரு பாலியல் தொழிலாளியை கூட  கெட்டவள்னு சொல்ல முடியாது.

நான் மனோகாரகன். எப்படியா கொத்த மொள்ளமாரி,முடிச்சவிக்கிக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கும்.இந்த ஓலகத்துலாஆரோ ஒருத்தர் மேலயாச்சும் - துக்கிளியூன்டு பாசமாச்சும் வச்சுருப்பான்.

ஆக மனசால ரோசிக்கிற மன்சன் சந்திரன். அதாவது நான்.   நான் ஆரையாவது குற்றம் சொல்ல முடியுமா? அல்லது பகைக்க முடியுமா?

நான் ஜலகாரகன்(தண்ணீர்) . நான் எதனோட வேணம்னா கலந்துருவன். நான் எதோட கலக்கிறேனோ அதனோட குணம் எனக்கு வந்துரும். அப்புறம் பகையேது?

சூரியனோட சேர்ரேன்னு வை அவர் அறிவு (செல்ஃப்) நான் மனசு . இந்த ரெண்டும் ஒரே பாய்ண்ட்ல நிக்கிறது ரெம்ப கஷ்டம் . நின்னா சாதிக்க முடியாதது எதுவுமில்லை.

செவ்வாயோட சேர்ரேனு வை. அவர் நெருப்பு நான் தண்ணி. அவரோட உஷ்ணத்தை தண்ணிப்பேன். ராகுவோட சேர்ரேன்னு வை. அவரு இல்லீகல் ஆக்டிவ்விட்டீஸுக்கு காரகம். நான் ராத்திரி வேளையில பலவான். மேற்படி வேலைகளுக்கு ராப்போதுதானே வசதி. இப்படி சொல்லிட்டே போகலாம்.அதனாலதான் எனக்கு ஆரோடவும் பகையில்லைன்னு ஒரு விதிவச்சிருக்காய்ங்க.

7.பிரமுகர்களின் மனைவிகளுக்கு நீங்க தான் அதிபதியாம் இதுக்கு என்ன காரணம்?
என்னோட நேச்சர் என்ன? எனக்கு சொந்த ஒளி கிடையாது. சூரியனோட ஒளியை பிரதிபலிக்கிறேன். பிரமுகர்களோட மனைவியருக்கு சொந்த புகழ் ஏது? கணவர்களோட புகழை வச்சு வண்டி ஓடும். அதனாலதேன் பிரமுகர்களின் மனைவியருக்கு நான் காரகம்.
மேலும் எல்லா விஐபியும் எவன் எப்ப கவுத்துருவானோன்னு அறிவுப்பூர்வமாவே ரோசிச்சு ரெம்ப ட்ரையா இருப்பான். பெண் பேசிக்கலி கொஞ்சம் சென்டிமென்ட் பார்ட்டி. இதுல புருசங்காரன் இப்படி சதா சர்வ காலம் அறிவுப்பூர்வமாவே இருக்கிறதால - எக்கனாமிக்கல் பொட்டன்ஷியாலிட்டி இருக்கிறதால அவள் கொஞ்சம் ஈவு இரக்கம்லாம் உள்ளவளா இருக்க வாய்ப்புண்டு.
சந்திரபலம் இருந்தாதான் ஈவு இரக்கம்லாம் இருக்கும் . ஆகவே ஒரு பிரமுகரின் மனைவிக்கு இந்த மாதிரி கேரக்டர் மீது ஈர்ப்பு வர வசதியிருக்கு.

8. தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவுக்கெல்லாம் உங்க பலம் அத்யாவசியம்ங்கறாய்ங்க. இதன் பின்னான தர்க்கம் என்ன?
ஏதோ சினிமால ஒரு வசனம் உண்டு "கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்"  தாய்ங்கறவள் மனசால ரோசிப்பா. அப்பன் அறிவால. என்னோட பலம் உள்ள ஜாதகன்மனசாலதான் ரோசிப்பான். இப்படியா கொத்தவனை அப்பன் பெருசா லைக் பண்ண மாட்டான்.ஆனால் தாய்? நிச்சயம் விரும்புவாள்.
சந்திர பலம் உள்ளவன் மனசால யோசிப்பான். தாயும் மனசால யோசிக்கிறவள். அதனால ஒரு ஜாதகத்துல சந்திரபலம் இருந்தா அவன் மனசால ரோசிப்பதோடு - தாயின்  அன்பையும் பெறுகிறான். தாயையும் நேசிக்கிறான். இதனாலதேன் தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவுக்கெல்லாம் சந்திர பலம் தேவைன்னு ஒரு விதி இருக்கு.
9.மனம் , நுரையீரல், சிறு நீரகம் இந்த மூன்றுக்கும்  உங்களூக்கும் இடையிலான தொடர்பு என்ன?
வீசிங் - நுரையீரல் தொடர்பான பிரச்சினை . இது வர மன அழுத்தமும் ஒரு காரணம் ( சந்திரன்= மனோகாரகன்) வீசிங் வர்ர நேரத்துல சிறு நீர் வெளியேறாது. (இதை பெரியார் சொல்லிவைக்க நாமும் அனுபவத்துல உணர்ந்திருக்கம்) .
குழந்தைகள் -வெகு சில டீன் ஏஜர்ஸுக்கு கூட படுக்கைய நனைக்கும் பழக்கம் இருக்கும். ( தூக்கத்துல படுக்கையிலயே  ஒன் பாத்ரூம் போயிர்ரது). அதிகம் உணர்வு வயப்பட கூடிய குழந்தைகளுக்கு - இவிக தூக்கத்துலயே பேசிட்டு இருப்பாய்ங்க  -ரெம்ப சென்சிட்டிவ் ஆக இருப்பாய்ங்க.
மேலும்  சிறு நீர்பை பலவீனமாக உள்ளவர்களுக்கும்  இது நடக்கலாம்.  மனம்,நுரையீரல்,சிறு நீரகம் இது மூன்றும் சிறப்பாக இருக்க சந்திர பலம் தேவை. சந்திர பலம் இல்லின்னா மூன்றுமே பிரச்சினை கொடுக்கும்.
கொளந்தைங்களை தூக்கி போட்டு விளையாடும் போது  உங்க முகம் நாறிரும்.ஏன்னா பயம் -மன உணர்வு. மூச்சுக்கும் -யோசனைகளுக்கும் உள்ள தொடர்பை ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.
10.காதல்ல உங்க ரோல் என்ன?
காதல் பிறப்பது கண்களில்னா ஆண்களில் வலது கண்,பெண்களில் இடது கண்ணுக்கு நான் தான் காரகம். மனசுல பிறக்குதுன்னா நான் தான் மனோகாரகன். காதல்ங்கறது எதிர்பாராவிதமா ஏற்படக்கூடிய ஒரு விபத்து. இதுல ஊடல் -கூடல் , உறவு -பிரிவு எல்லாமே எதிர்பாராவிதமாத்தான்  நடக்கும். எந்த விஷயத்துல எல்லாம்    நிச்சயமற்ற தன்மை ,எதிர்பாராத்தன்மை இருக்கோ அதுக்கெல்லாம் நான் தான் காரகம்.
11 முதலான 16 கேள்விகளுக்கு பதில்  நாளை