Sunday, December 30, 2012

செவ்வாய் தோஷம்: ஆண் பெண் வித்யாசம்

நான்: வணக்கம் தலை !

செவ்:
வணக்கம் . தலைக்கு சூரியன் காரகம். நான் எல்லாம் ரத்தம் , எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜைக்கு காரகம்

நான்: ஐம் சாரி பாஸூ.. ஒரு ஃப்ளோல வந்துருச்சு..

செவ்:
நான் பாஸ் இல்லை. பாஸ் ஆகனும்னா சூரியபலம் தேவை. நான் ஜஸ்ட் கமாண்டர் தான்.

நான்:
அடடா.. என்னங்ணா இன்னைக்கு இப்படி கேட்டை போடறிங்க?

செவ்:
இது கரெக்டு .. ஏன்னா நான் சகோதர காரகன்

நான்:
சார்..  நீங்க ஒரு ஜாதகத்துல கெட்டிருந்தா தோஷ ஜாதகம்னு ஓரங்கட்டிர்ராய்ங்களே.. இந்த தோஷம் ஆண் பெண் விஷயத்துல ஒரே மாதிரியா வேலை செய்யுமா? இதுல வித்யாசம் எதுனா இருக்குமா?

செவ்: நிச்சயமா இருக்கும். அதுலயும் இந்திய பெண்ணுக்கும் -அமெரிக்க பெண்ணுக்கும் இடையில கூட வித்யாசம் இருக்கலாம்.

நான்: மொதல்ல ஆண் பெண் வித்யாசத்தை சொல்லுங்க

செவ்:
ரத்தம்ங்கறது ஆண் பெண் ரெண்டு பேருக்கும் பொதுன்னு நினைக்கிறிங்க. பெண் உடலில் ரத்தம் கொஞ்சம் "தின்" ஆ இருக்கும். கிரகண சமயத்துல ஆண் ரத்தமும் பெண் ரத்தம் போல மாறுதாம். ஜெனரலாவே பெண் ரத்தத்துல ஹீமீக்ளோபின் குறைவா இருக்கும். மேலும் பெண்ணின் உடலில் மென்ஸ்ட் ருவல் சைக்கிள்னு ஒன்னிருக்கில்லை.  அதனால பெண்ணோட பாடிக்கு எஃபெக்ட் சாஸ்தி.

நான்:
புரியுது புரியுது.. அப்போ ஆண் ஜாதகத்துல நீங்க கெட்டிருந்தாலும் எஃபெக்ட் குறைவுங்கறிங்க?

செவ்:
ஒடனே மேல் சேவனிசம் ! பெண்ணுக்கு அந்த மேட்டர்ல பிரச்சினை அதிகம்னா ஆணுக்கு கோபம் கோபம்னு ஒன்னிருக்கில்லை. அந்த ரூட்ல ஆப்படிச்சுருவன்ல

நான்:
கிளிஞ்சுது ..எந்த ஆண் கோபத்திய ரோட்ல காட்டறான். காட்டினா கிளிஞ்சுரும்ல..முக்காவாசி ஆம்பளை ஊட்டு பொம்பள மேலதானே கோவத்தை காட்டறான்.

செவ்:
அது கூட கரெக்டுதான்..அதுக்கு தானே கரண்டு, நெருப்பு,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகள்னு ஆப்ஷன்ஸ்  வச்சிருக்கன். அதை வச்சு பல்பு கொடுத்துருவனே..

நான்:
அண்ணா ! ஒரு மேட்டர் ஸ்பார்க் ஆகுது. தாய்குலம் எப்பயும் நெருப்போடயே விளையாடறாய்ங்கல்ல..இதனால தோஷம் குறையுமோ?

செவ்:
நிச்சயமா குறையும். அடுப்புல ஒவ்வொரு தாட்டி ஏத்தி இறக்கறப்பயும் சூடுபட்டுக்கிறது, கொதிக்கிறது தெறிச்சு விழுகுறதுன்னு தோஷம் இன்ஸ்டால்மென்ட்ல தீரும். அதே சமயம் அவிக சூப்பரா சமைச்சு பேர் வாங்கினா தோஷம் கூடும்.

நான்:
அப்போ ..இதே ரூட்ல இன்னொரு பாய்ண்டும் ஸ்பார்க் ஆகுது..ஆண்கள் உங்க காரகத்துல வேலை செய்துக்கிட்டிருந்தாலும் தோஷம் குறையும் அப்டித்தானே..

செவ்:
குறையலாம்.ஆனால் அந்த தொழில்,உத்யோகம்,வியாபாரத்துல லாபம் சம்பாதிச்சாலும், பேர் புகழ் பெற்றாலும் தோஷம் அதிகரிக்கும்.

நான்:
மொத்தத்துல கணக்கு கணக்கு தான்..
செவ்:
இல்லையா பின்னே..

நான்:
சார்.. உங்களை ஒரு கேள்வி கேட்கறேன்..வேற எதுனா கேளுன்னு நசிகேதனை டைல்யூட் பண்ண எமன் மாதிரி டைல்யூட் பண்ணப்படாது..

செவ்:
ச்சொம்மா கேளு கண்ணா..

நான்:
உங்களோட பலம் இல்லாத ஜாதகத்துல பிறந்து அவதிபடனும்னு ஆரு எளுதி வச்சாய்ங்க?

செவ்:
நீங்க தான் கண்ணா.. கடந்த பிறவியில என் (செவ்)  காரகமுள்ள சனத்தை டார்ச்சர் பண்ணி ,சட்டம் நியாயத்துக்கு புறம்பா என் (செவ்) காரகமுள்ள பொருட்களை லவட்டிக்கிட்டவுக அந்த கருமத்தை தொலைக்க நான் பலமிழந்த ஜாதகத்துல பிறந்து அவதி படறிங்க..

நான்:
அடடா.. இப்பத்தேன் கணக்கு டாலி ஆகுது. நம்ம ஜாதகத்துல நாலமிடத்துல நின்னுருக்கிங்க. போன ஜன்மத்துல அம்மாவோட அருமை தெரியாம அவமதிச்சிருக்கனும். அடுத்தவன் வீட்டை ,வாகனத்தை கொளுத்தியிருக்கனும்.இந்த காலத்து அரசியல் வாதிங்களை போல நில ஆக்கிரமிப்பெல்லாம் செய்திருக்கனும். அண்ணன் தம்பிகளுக்கு உரிய பங்கை கொடுக்காம ஆப்படிச்சிருக்கனும். அதனாலதேன் இந்த ஜன்மத்துல இப்படி ஒரு ஜாதகத்துல பிறந்து நாயடி பட்டேன்னு நினைக்கிறேன்.

செவ்:
கரெக்டு..

நான்:
இதுக்கு பரிகாரம்?

செவ்:
என்  காரகமுள்ள சனத்துக்கு  என் காரகமுள்ள பொருட்களை ஃப்ரீயா கொடுத்துட்டிரு .. ஒரு கட்டத்துல கணக்கு டாலி ஆனதும் மேட்டர் ஓகே ஆயிரும்.

நான்:
ரெம்ப நன்றிங்ணா.. இன்னம் நிறைய கேள்விகள்ளாம் இருக்கு. நாளைக்கு கேட்கிறேன்.
செவ்:
அப்படியே ஆகட்டும்.