Wednesday, March 6, 2013

கணவன்/மனைவியை கொல்பவர் யார்?

அண்ணே வணக்கம்ணே !
2013, ஜனவரி 8 ஆம் தேதிக்கு பிறகு   இன்னைக்கு நம்ம நிர்வாண உண்மைகள் வலைப்பூ மூலமா உங்களை சந்திக்கிறேன்.ஏறக்குறைய ரெண்டு மாசம் காலம் அதாவது 60 நாள் - இந்த வலைப்பூவோடு அனுபவஜோதிடம்   வலைப்பூவையும்  ஏறக்குறைய பூட்டி வச்சிருந்தேன்.( ஃபார் இன்வைட்டட் ரீடர்ஸ் ஒன்லி)

ஏன்னா வெளிச்சம் அதிகமாயிருச்சுங்கற ஃபீலிங்கு ஓவராயிட்டே போச்சு. பாடி ,மைண்டு எல்லாமே உதற ஆரம்பிச்சிருச்சு. இப்பம் மட்டும் ஏன் திறந்து விட்டுட்டேன்னு  கேப்பிக. சொல்றேன்.

ஜேஜிக்கும் நமக்கும் இருந்த அக்ரிமென்டே என்னடான்னா "ஜேஜி ! ஜேஜி ! ! நீ என்னை பார்த்துக்க நான் இந்த நாட்டை பார்த்துக்கறேன்"ங்கறதுதான்.ஆனால் 2004 ல் இருந்து நாட்டை ஏறக்குறைய டீல்ல விட்டுட்டம். அதனால வந்த கு.ம தான் இந்த நிலைக்கு காரணம்னு கண்டு பிடிச்சுட்டு காரியத்தை துவங்கிட்டம்ல.

மொத கட்டமா தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்பிக்களுக்கும் வாங்க இந்தியாவை பணக்கார நாடாக்கலாம்னு அழைப்பு விட்டிருக்கம்ல ( ஆ.இ.2000)

மேலும் தெலுங்கு திரையுலகத்துல பிராமணீயத்தை கிழி கிழின்னு கிழிச்சிக்கிட்டிருக்கம். பிராமணியத்துல நம்மை ரெம்ப கடுப்பாக்கிற  மேட்டர் வித்தைய ஒளிச்சுவைக்கிறதுதேன். ப்ளாகை பூட்டி வைக்கிறதும் வித்தைய ஒளிச்சு வைக்கிற மாதிரி தானே அதனலாதேன் பப்பரப்பேன்னு திறந்துவிட்டுட்டன். ஜா.ரா உட்பட வந்து போவட்டுமே..ஜா.ராவின் இன்னொரு  ஸ்கான்டல்  நம்ம பார்வைக்கு வந்தது. ( ஒரு பார்ட்டிக்கு டி.ஏல்லாம் கொடுத்து சேலத்துக்கே அனுப்பி விஜாரிச்சுட்டு வந்துட்டம்.ஆனால் அது படு சீக்ரெட்டாக்கும். நேரம் வரும் போது வெளிய விடுவம்ல)

சரீ..இ அனுபவஜோதிடம் வலைதளத்துல லேட்டஸ்டா என்னத்தை எழுதிட்டம் ???? ஆங் .. கணவன்/மனைவியை கொல்பவர் யார்? இந்த கேள்விக்கான பதிலை சைக்காலஜி அடிப்படையிலயே விவரிச்சுட்டன். இன்னைக்கு ஜோதிட கோணத்துல பார்ப்போம் ஓகேவா?

ஜாதகத்துல 7ங்கறது வாழ்க்கை துணையை காட்டும். 8ங்கறது மரணத்தை காட்டும். செவ் உடனடி மரணத்தை -திடீர் மரணத்தை கொடுத்துர்ர கிரகம்.அதனாலதேன் செவ் 7 -8 ல இருக்கிறதை பார்த்ததுமே சோசியருங்க டர்ராயிர்ராய்ங்க.

செவ் எட்டிலிருக்கிறதாலயோ .. ஏழிலிருந்து லக்னத்தை பார்க்கிறதாலயோ மரணம் தானா வந்தாலும் பரவால்லை. திடீர்னு வந்தாலும் பரவால்லை. (குழந்தை குட்டின்னு ஆகி அவிகளை அனாதையா விட்டுட்டு போகாம போய் சேர்ந்திரலாம். தந்தியில புதுப்பெண் மரணம்னு ஒரு டிசி அளவுல செய்தி வரும் அவ்ளதேன்.

ஆனால் பிரச்சினை இதோட முடியலை. செவ் எதிரிக்கு காரகர். பெண்ணுக்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம். இங்கன செவ் நின்னு மணாளனே மங்கைக்கு மரணத்தை தந்துட்டா?
அல்லது மணமகனின் எதிரிகள் அவருக்கு குறி வைக்க அதுல மனைவியும் மாட்டிக்கிட்டா?

பையன் ஜாதகத்துல ஏழுல இருக்கிற செவ் பொஞ்சாதிய எதிரியா பாவிக்க வச்சு அ அவளை எதிரியாவே மாத்தி தொலைச்சு போட்டு தள்ள வச்சுட்டா? இந்த மாதிரி கேஸுனங்களுக்காகவே காட்டமான பரிகாரங்களை இன்னைக்கு தந்துர்ரன்.

ஏதோ படத்துல (சுந்தரா டிராவல்ஸ்?) வடிவேலு இடம்,பொருள்,ஏவல்னு சகலத்தையும் மறந்து ஒரு எலியை விரட்டிக்கிட்டு போயிருவாரு. அதை பார்த்து நான் கூட சிரிச்சிருக்கன். இந்த எலிகள் பண்ற கூத்திருக்கே.. நம்மையும் வடிவேலு ஆக்கிரும் போல.

சிபியு வை மூடி வச்சா குஞ்சு வச்சுருதுன்னு திறந்து வச்சம். கொய்யால விளக்கு எரியுது. நான் ஒரு மன்சன் டொக்கு டொக்குன்னு தட்டச்சிக்கிட்டிருக்கன். அதும்பாட்டுக்கு ஹீரோ கணக்கா பைப் பிடிச்சு ஏறி வந்து சன்னல் வழியா எட்டிப்பார்த்து சிபியுக்குள்ள போகுது.

எக்கு தப்பா எதையாச்சும் ஒயரை கடிச்சு வச்சுட்டா கோவிந்தா. ஜஸ்ட் இர்ரிடேட் ஆகி ..டப்பா மேல சின்ன தட்டு தட்டினேன் அவ்ளதான். ஏதோ கார்ட் லூஸ் கான்டாக்ட்  ஆயிட்டாப்ல இருக்கு. மானிட்டர் பவர் கட் கணக்கா இருண்டு போச்சுது.

அப்பாறம் நம்ம ஜேம்ஸு சொன்னது ஞா வரவே எல்லாத்தையும் பிடுங்கிட்டு செருகினபிறவு அஜீஸ் ஆயிருச்சு. எலில்லாம் ராகு காரகம் . நமக்கு நால்ல செவ் மட்டும் இருந்திருந்தா ஃப்ளேமே வந்திருக்கும் போல. கூட கேது இருந்ததால எலி -லூஸ் காண்டாக்ட்டோட முடிஞ்சது.

எதுக்கு சொல்ல வரேன்னா எல்லா தீ்ர்வையும் கொடுத்துரனுங்கற துடிப்பு நமுக்கு இருந்தாலும் தீர்வுகளை பெற்று பலன் பெறும் யோகம் சனத்துக்கு இல்லை போல. அல்லது ஜேஜி ..தாளி நீ பாட்டுக்கு பரிகாரத்தை கொடுத்துட்டு போயிருவ.  அப்போ நான்  படைச்ச கிரகம்லாம் டம்மியாயிரும்லன்னு சீப்பை ஒளிச்சு வைக்கிறாப்ல இருக்கு.

இந்த மேட்டர்ல கடவுளுக்கு நான் எப்பமோ சொல்லிட்டன். த பாருங்க பாஸூ.. நான் பரிகாரம் கொடுத்த மாத்திரத்துல இந்த சனம் ஃபாலோ பண்ணிருமா என்ன?  அப்பம் விதி அவ்ள சப்பையா? ஃப்ரீயா உடுங்க. நான் பாட்டுக்கு சொல்லிட்டு போறேன்னு கன்வின்ஸ் பண்ணி வச்சிருக்கன்.

கடவுளுக்கு கஜினி சூரியா கணக்கா மெமரி லாஸ் கீறாப்ல இருக்கு. அப்பப்போ சீப்பை ஒளிச்சு வைக்க பார்க்குது.

மேட்டருக்கு வந்துரலாம் . மேற்  சொன்ன விதமாக செவ் டிக்கெட் போட பார்த்தாலும் ரெண்டு பேருல ஒருத்தருக்கு தீர்காயுசு இருந்தாலும் அந்த  சோடி பிரிஞ்சுரும். இதான் ஆறுதல்.

இதுக்கு என்னதான் பரிகாரம்னா......

ஏழில் செவ்:
1.போலீஸ் ,மிலிட்டரி,ரயில்வே துறையை சேர்ந்தவரை மணக்கனும்
2.அல்லது ஏதேனும் விபத்தில் அங்க ஹீனம் ஏற்பட்டவரை மணக்கலாம். அல்லது ஏற்கெனவே மேஜர் ஆப்பரேஷன் நடந்தவரை .
3.சுமார் 9 வயது இளையவர் - அல்லது அவ்வாறான  இளைய தோற்றம் உள்ளவரை மணக்கலாம்.
4.தம்பதி இருவரும் கராத்தே ,குங்ஃபூ போன்ற மார்ஷல் ஆர்ட்ஸ் கற்கலாம்.
5.இருவரும் சமைக்கனும். முக்கியமா அசைவம் .ஆனால் திங்க கூடாது.
6.வேல் பூசை செய்யலாம்.
7.செம்பு நகைகள் அணியலாம்.
8.கலாய் பூசப்பட்ட செம்பு பாத்திரங்களில் சமைக்கலாம்.
9.செவ் கிழமை அ மிருகசீர்ஷம், சித்திரை,அவிட்டம் போன்ற  நட்சத்திரங்களில் உண்ணாவிரதம்+ மவுன விரதம் மேற்கொள்ளலாம்.
10. ரத்த தானம் கட்டாயம் செய்யவும். ரத்த தானம் செய்யவே ரத்தவிருத்திக்கான உணவு வகைகளை தேடி தேடி சாப்பிடுங்கள்.
உபரியாக லக்ன செவ்வாய்க்கு தரப்பட்ட பரிகாரங்களையும் செய்யனும்.

எட்டில் செவ்:
இந்த கிரகஸ்திதிக்கு ஆண் பெண்களுக்கு வெவ்வேறான பரிகாரங்களை சொல்லனும். நாளைக்கு சொல்றேனே..