Monday, April 1, 2013

ஏப்ரல் 12 முதல் மே 23 : ஹை அலர்ட்?

அண்ணே வணக்கம்ணே !
நாம ஒன்னு சீப் மினிஸ்டரும் இல்லை, பிரைமர் மினிஸ்டரும் இல்லை. நமக்கு உளவுத்துறை ரிப்போர்ட் எல்லாம் வர்ரதில்லை. நாம பிரகடனப்படுத்தற இந்த ஹை அலர்ட்டுக்கு காரணம் சனி செவ் பார்வை .

 நவகிரகங்கள்ள செவ் எந்தளவுக்கு புலி - சனின்னா   நமக்கு எந்தளவுக்கு கிலின்னு பல சந்தர்ப்பத்துல சொல்லியிருக்கன்.  நவீன பரிகாரம்னு கெரகங்களுக்கு டேக்க கொடுக்க கத்து கொடுக்கிற  நமக்கே  செவ் மட்டும் கொஞ்சம் பீதிய கிளப்புற கெரகம் தான்னும் விலாவரி சொல்லிகீறேன். அதுலயும் இந்த சனி செவ் சேர்க்கை -பரஸ்பர பார்வைன்னா  நமக்கு அஸ்தியில சுரம் கண்டுரும்.

சோசியத்தை பத்தி தெரியாதவுக என்னாத்துக்கு இந்த ஆளு இப்படி பீதிய கிளப்பறாருன்னு சலிச்சுக்கலாம் கூட. ஆனால் என்ன பண்றது பாஸூ.. சோசியல் லைஃப்ல ஒவ்வொருத்தன் பிஹேவியருக்கும் ஒவ்வொரு கெரகம் காரணமா இருந்து நம்மை கடுப்பாக்கி கன்வின்ஸ் பண்ணுதே.
ஜாதகத்துல சூரியன் செரி இல்லாதவன் ஈகோவால , சந்திரன் செரி இல்லாதவன்  சஞ்சலத்தால ,செவ் செரி இல்லாதவன் கோவத்தால ,ராகு -கேது செரி இல்லாதவன் ஈசி மணி மேல பாசத்தால +  மத துவேசத்தால  நாசமா போறாய்ங்க.

ஒரு காரியத்தை ஒருத்தன் கிட்ட சொல்லி செய்ய சொல்றோம்னு வைங்க. குரு செரியில்லாதவன் லேட்டா செய்வான், சனி செரியில்லாதவன் ரெம்ப லேட்டா செய்வான், புதன் செரியில்லாதவன் சொதப்பிருவான்,சுக்கிரன் செரியில்லாதவன் பட்லிகிட்டே கொஞ்சறதுல மூழ்கி  அட்டெம்ப்டே பண்ண மாட்டான்

இதெல்லாம் ஒரு பக்கம்னா சனி செவ் சரியில்லாம -ரெண்டு பேரும் சேர்ந்திருந்தாலோ - அல்லது ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாலோ கை,கால் சேதாரத்தோட திரும்புவானே. இதுக்கு இன்னா பண்றதாம்?

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போல கெடும்னு பாரதியார் ச்சொம்மாவா சொன்னாரு..(????) இந்த சனி செவ் மேட்டரு 2013 ஏப்ரல் 12 ஆம் தேதியிலருந்து மே 23 ஆம் தேதிவரை ஒர்க் அவுட் ஆகப்போவுது. சனி துலாம்ல இருக்க செவ் மேஷத்துல இருக்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க போறாய்ங்க.

இந்த கிரக நிலை 12 ராசிகளுக்கும் என்னவிதமான எஃபெக்டை கொடுக்கும்னு விவரிக்கத்தேன் இந்த பதிவு. சனி செவ்வாய் ரெண்டு பேர்ல சனி வக்கிரத்துல இருக்கிறது ஒரு வகையில ப்ளஸ் ஒரு வகையில மைனஸ்.இது சில ராசிக்காரவுகளுக்கு ப்ளஸ் சில ராசிகளுக்கு மைனஸ். அதை எல்லாம் விரிவா பார்க்கத்தான் போறோம். 

மொதல்ல பொதுவா  நாட்டுக்கு - நாட்டு மக்களுக்கு என்ன நடக்கும்னு பார்ப்போம்.

சனி துலாம்ல உச்சம்.ஆனால் வக்ரம். இது தொழிலாளர்களுக்கு ,விவசாயிகளுக்கு,தலித்துகளுக்கு  நல்லதில்லை.

சுரங்கம்,குவாரி,ஐரன்,ஸ்டீல் துறைகளுக்கும் நல்லதில்லை. குறிப்பா அரசு ஊழியர்களில் யூனிஃபார்ம் போடறவுகளுக்கும் நல்லதில்லை. சனி மேற்குதிசைக்கு காரகர். இதனால நாட்டின் மேற்கு பகுதி மக்களுக்கு பிரச்சினை வரலாம்.

சனி செவ்வாய்க்கு பார்வை இல்லைன்னா பிரச்சினைய ஊறப்போட்டா சரியா போயிரும். ஆனால் இந்த செவ் பார்வை கிடைக்கிறதால பத்திக்கும் (செவ் = நெருப்பு ) போலீஸ் எல்லாம் அனுப்ப வேண்டி வரும்.துப்பாக்கி சூடு வரை போகும்.

ஆயுதம் தாங்கிய கொள்ளைகள் நடக்கலாம். தீவிபத்து (அதுலயும் ஆயில் நிறுவனங்கள் -பெட் ரோல் பங்கு, கேஸ் ஃபில்லிங் யூனிட்ல எல்லாம் அலார்ட்டா இருக்கனும்)

போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே ,மின்சாரத்துறைக்கும் இது போதாத காலம் தான். சனங்களுக்கு  கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான வியாதிகள், கோபம்,ரத்தம்,மஜ்ஜை தொடர்பான பிரச்சினைகள் அதிகமா வரலாம்.
செவ் = தெற்கு திசை .இதனால் தென் இந்தியாவுல பிரச்சினைகள் க்ளைமேக்ஸுக்கு போகலாம். நான் இதுக்கெல்லாம் கூட பெருசா கலங்கலை.
வட கொரியா -தென் கொரியா பஞ்சாயத்துல எதுனா சாஸ்தி கம்மியாகி வார் ஆரம்பிச்சுருச்சுன்னா ஓலகமே நாறிரும்.

எல்லா நாடுமே பஞ்ச பரதேசிக, அன்னாடங்காய்ச்சிங்க மாதிரி அல்லாடற இந்த காலத்துல ஒரு யுத்தம் வேற மாட்டிக்கிச்சினா நினைச்சாலே பயம்மா இருக்கு.

சாந்தி காலத்துலயே கிளியுது. இதுல யுத்தம் வேற வந்து தொலைச்சா ?
அதுக்கு மிந்தி பதிவுக்கு போயிரலாமான்னு கேட்டு 12 ராசிகளுக்கும் பலனை சொல்லனும். இன்னாடா மேட்டருன்னா பவர் கட் ஒரு பக்கம்  ஆஞ்சனேயர்  வானர சேனைய அனுப்பி டெலிஃபோன் வயரை பிடுங்கி விட்டுட்டாரு. ப்ளான் பண்ண மாதிரி பலனை போட முடியலை நாளைக்கு கட்டாயம் போட்டுர்ரன். 
ஓகேவா உடுங்க ஜூட்டு.