Friday, August 21, 2015

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி :விளக்கம் (1-25)


அண்ணே வணக்கம்ணே !

எச்சரிக்கை:
இந்த விளக்கம் எனக்கு நானே கொடுத்துக்கிட்டது . இதை ஏற்பவர்கள் ஏற்கலாம்.ஏற்காதவர்கள் தங்கள் விளக்கத்தை கமெண்ட்ல தரலாம் .
நோ ப்ராப்ளம் !

1.அம்பிகாபுர வாசின்யை ஸ்வாஹா
சிவாஜி வசித்த சாலை சிவாஜி கணேசன் சாலையாகிறது , ஒய்.எஸ்.ஆர் வாழ்ந்த  மாவட்டம்  ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் ஆகிறது .அம்பிகை வசிக்குமிடம் அம்பிகாபுரம்.
அம்பரம் = வான். அம்பிகா = வானில் வசிப்பவள்? வான் போல் உயர்ந்த உள்ளங்களில் வசிப்பவள்னும் சொல்லலாமா?  நிலாவை அம்புலின்னு சொல்றம் .அம்பிகாங்கற வார்த்தைக்கு நிலவின் தேவதைன்னு கூகுள் சொல்லுது.
மனித உடலில் சூரிய மண்டலம் சந்திர மண்டலம்னு இருக்கு . இதெல்லாம் பின்னாடி விரிவா வருது அப்ப பார்த்துக்கலாம். இப்ப பாய்ண்டுக்கு வந்துருவம் .அம்பிகை வசிக்குமிடம் அம்பிகாபுரம். அம்பிகாபுரத்தில் வசிப்பவள் அம்பிகாபுர வாசினி .

2.அன்ன பூர்ணேஸ்வர்யை ஸ்வாஹா
கேடு கெட்ட அரசாங்கம், மனிதமற்ற பொருளாதார நிபுணர்கள் கூட உணவுப்பொருள் குறியீடு குறைஞ்சு போச்சுன்னு பதர்ராய்ங்க. உணவுப்பாதுகாப்பு ,இலவச அரிசி .ஏன்னா அன்னம் இல்லின்னா எமன் கன்னம் வச்சு உயிரை ஆட்டைய போட்டுக்கிட்டு போயிருவான்.
காந்தி,சசி பெருமாள் எல்லாம் எத்தனையோ நாள் உண்ணாவிரதம் இருந்தாய்ங்களேம்பிங்க. அந்த சக்திய கொடுத்தது மனோசக்தி. (சக்தி அண்டர்லைன்)
பூரணம் =முழுமை ,அன்ன பூரணம் பூரணமான அன்னம் .அதாங்க முழுமையான சத்துணவுங்கறாய்ங்களே.. அதுக்கு ஈஸ்வரி  ஆத்தா.
ஈஸ்வரன்னா பாஸ். ஈஸ்வரின்னா லேடி பாஸ். காசிருக்கேன்னு  365 நாளும் - 3 வேளையும்  அரிசி சோறு  சாப்டு ஷூகரு,பீசா பர்கரு சாப்டு  நெஞ்சுல எரிச்சல்,பைல்ஸ் வாங்கறதுல்ல. திட்டமிட்ட சரிவிகித சம உணவு . இதுக்கு பேருதான் முழுமையான உணவு . இந்த முழுமையான  உணவுக்கு  தலைவி ஆத்தா.

3.அகிலாண்டேஸ்வரி
அண்டம்னா உலகம், அகிலாண்டம் சகல உலகங்கள். சகல உலகங்களுக்கும் பாஸ்.

4.அம்ருத்தாயை
அம்ருதம் =அமுதம் , சாகாவரம் கொடுக்கிற லிக்விட்.  டீ சாப்பிடறவனோட நட்பு கிடைச்சா டீ கிடைக்கும். சரக்கு பார்ட்டியோட சேர்ந்தா சரக்கு கிடைக்கும்.ஆத்தா கூட டீல் வச்சுக்கிட்டா அமுதம் கிடைக்கும் பாஸ்.
அதுக்காவ 120 பூர்ணாயுசு  இருப்பம், சாவே வராதுன்னெல்லாம் கனவு காணாதிங்க. நொடிக்கு நொடி செத்து பிழைக்கிறோமே அந்த “பாவத்து” இருக்காது.  நம்ம பிறப்புக்கு முன்னே -இறப்புக்கு பின்னே எந்த டைமன்ஷன்ல இருந்தமோ -இருக்கப்போறமோ அந்த டைமன்ஷனை ஒரு தாட்டி அனுபவிச்சுடா சாவாவது இன்னொன்னாவது?

ஆக ஆத்தாள “கவர் பண்ணி “வச்சுக்கிட்டா உங்க எண்ணத்துல அமுதம் இருக்கும், எண்ணமெல்லாம் செயலாகும். உங்க  பேச்சுல அமுதம் இருக்கும், உங்க பேச்சு கவர்ன்மென்ட் ஜீ.ஓ வை விட பக்காவா அமலாகும். பிணத்துக்கு உயிரூட்டும்னு பீலா விட மாட்டேன்.ஆனால் செத்தவன் போல இருந்தவன் கூட துள்ளி எழுவான். வாக்கு பலிதம் உண்டாகும்.

5.ஆர்த்த ஜன ரக்ஷின்யை
ஆர்த்த = உதவி நாடி வந்த சனங்களை சேஃப் பண்றவ. அன்னார்த்துலு = சோத்துக்கு இல்லாதவுக

6.ஆத்யந்த சிவ ரூபாயை
ஆதி =ஆரம்பம், அந்தம் =முடிவு ,டாப் டு பாட்டம் சிவ ரூபமாக இருக்கிறவள். சிவம்னா ஒரு கேரக்டர் மட்டுமில்லிங்ணா. சிவம்னா மங்களம்/சுபம்/பாசிட்டிவ் இப்படி பல அருத்தம் இருக்கு. ஆத்தாவுல நெகட்டிவ்னு எதுனா இருக்குமா? டாப் டு பாட்டம் பாசிட்டிவ் எனர்ஜிதான்.
புருசன் பொஞ்சாதிகளை கவனிச்சு பாருங்க. கண்ணாலமான 6 மாசத்துலயே புருசன் கேரக்டர் பொஞ்சாதிக்கும் -பொஞ்சாதி கேரக்டர் புருசனுக்கும் லேசா ட்ரான்ஸ்ஃபர் ஆக ஆரம்பிச்சிருக்கும்.
அய்யனும் ஆத்தாளும் ஆதி தம்பதிகளாச்சே. அதான் சிவ ரூபமா இருக்கா ஆத்தா.

7.அஷ்டைஸ்வர்ய ப்ரதாயின்யை
ப்ரதாயினின்னா தருபவளேன்னு அருத்தம். எதை தருபவள்? அஷ்ட ஐஸ்வர்யங்களை தருபவள். அஷ்ட லட்சுமின்னு ஒரு கான்செப்ட் இருக்கில்லை. வித்யா லட்சுமி,தன லட்சுமி,வீர லட்சுமி,சந்தான லட்சுமி எட்செட்ரா..( ஷோடச லட்சுமின்னு ஒரு கான்செப்ட் கூட இருக்குப்போ – 16 லட்சுமியாம் -16 ம் பெற்று பெரு வாழ்வு வாழசொல்றாய்ங்களே அதுதான் போல)

லட்சுமியை படைச்சதே ஆத்தா தானே. நிலக்கரித்துறைக்கு அமைச்சரை போட்ட மன்மோகனார் நினைச்சா கோல் ப்ளாக் டைரக்டா அலாட் பண்ணலாம் தானே.

8.அபய வரத ஹஸ்தின்யை
அபயம்னா என்ன பயத்துக்கு எதிர்பதம். பயமில்லா நிலை. பயத்துல உள்ளவனுக்கு அபயம் கொடுத்தா பயமற்ற நிலை ஏற்படும். இப்படி அபயம் கொடுக்கிற கைக்காரி ஆத்தா.
வரதம்னா வரம் கொடுக்கிறன்னு அருத்தம்.

9.அனாமிகா
பெயரற்றவள். கொய்யா.. இந்த சத நாமாவளியிலயே 100 பேர் இருக்கு. இன்னம் சஹஸ்ர  நாமம்னா ஆயிரம் பேரு. ஆனால் அனாமிகான்னு ஒரு நாமம்.  மனித மூளை தர்கத்தின் அடிப்படையில இயங்கும். ஆனால் ஆன்மீகத்துல தர்கத்துக்கு "தாவே" கிடையாதுங்கோ.

10.அங்காள பரமேஸ்வர்யை
அம்=குளிர்ந்த ,காள (மேகம்?) மழைதரும் கரிய மேகங்களுக்கு தலைவி?

11.அனந்தமயீ
அந்தம் =முடிவு ,அனந்தம்= முடிவற்றவள்

12.ஆத்யந்த ரஹிதாயை
ஆரம்பமும் -முடிவும் அற்றவள்.

13.அருணாயை
அருணன் =சூரியன் இதுக்கு இன்னொரு அர்த்தமும் கொடுக்கலாம்.ருணம் =கடன் ,அருணா =எவனுக்கும் ஆத்தா பாக்கி கிடையாதுங்கோ.
நாமெல்லாம் ஆருக்கோ கடன் பட்டுத்தான் – அந்த கடனை தீர்க்கத்தான் பிறந்து வரோம்.  ஆனால் கடனை கூட்டிக்கிட்டே போறோம்.ஆனால் ஆத்தாவுக்கு கடனே கிடையாது. போனா போறதுன்னு பிச்சை போடறா தட்ஸால். ஆத்துக்காரருக்கே பிச்சை போட்ட கிராக்கியாச்சே.

14.பால பீட அதிரோஹின்யை
தச வித்யானு ஒரு சப்ஜெக்ட் இருக்கு.காளி , தாரா ,பகளாமுகி ,கமலாத்மிகா ,சின்னமஸ்தா, தூமாவதி, திரிபுரா, பைரவி ,சுந்தரி ,புவனேஸ்வரினுட்டு  பத்து ரூபங்கள்ள ஆத்தாளை வழிபடறது தான் கான்செப்ட்.
இதுல ஒரு  பெண் குழந்தையை அம்மனா பாவிச்சு வணங்கறதும் ஒரு மெத்தட். ( இந்த டாப்பிக் பத்தி பாலகுமாரன் ரெம்ப டீட்டெய்ல்டா ஒரு நாவல் எழுதியிருக்காரு படிச்சிருக்கிங்களா?) அந்த பெண் குழந்தையை உட்கார வைக்கிற மனைக்கு பெயர் பால பீடம். அதிரோஹணம்னா ஏறுவது. பால பீடத்தின் மீது ஏறுபவளேனு அருத்தம்.

15.பஹளா முக்கே
Net ல ப்ரவுஸ் பண்ணா வேற தகவல் கிடைக்கும். ஆனால் நமக்கு மாயா பீஜத்தை உபதேசம் பண்ண பார்ட்டி ,ஆத்தாவோட இந்த வடிவம் பேங்க்ல டெல்லர் மாதிரி. நாம எந்த சாமியை கும்பிட்டாலும் அதுக்கான பலனை தர்ரது இந்த உருவத்துலதான்னு சொன்னாரு.
பஹளா =பல ,முக்கே =முகங்கள். பல முகங்களை உடையவளே

16.பில்வ வன ப்ரியே
ஆத்தாவோட ஆத்துக்காரரு சிவனார். சிவனாருக்கு ரெம்ப பிடிச்சது வில்வம். மேலும் அர்த்த நாரீஸ்வர தத்துவம் தெரியுமில்லையா? திருவிளையாடல்ல சிவன் தன் பாடியிலயே இடபாகத்தை அலாட் பண்ணி மகளிர் ஒதுக்கீட்டுக்கு பிள்ளையார் சுழி போடறாரே ஞா வல்ல?
இதனால வில்வ மரங்கள் அடர்ந்த வனத்தை விரும்புபவள்னு அருத்தம்.

17.புவனேஸ்வர்யை
புவனம் =உலகம் ஈஸ்வரி =தலைவி

18.பிந்து ஸ்வரூபின்யை
ஆழ்ந்த தியானத்துல ஒரு ஒளி புள்ளி தெரியும் இதை பிந்துன்னு சொல்வாய்ங்க. அந்த பிந்து ஸ்வரூபமானவளே

19.சண்டிகாயை
சண்டன் ங்கற ராட்சனை போட்டு தள்ளியவளே.  நம்ம வீட்ல தாய்க்குலம் குழந்தைகளை "சண்டித்தனம் பண்ணாதே"ம்பாய்ங்களே ஞா வருதா?  ஆத்தாவுக்கு சண்டித்தனம் உண்டு.  ஆத்தா மேட்டர்ல எதுனா கமிட் ஆகி அதை டீல்ல விட்டாச்சுன்னா அது ஞா வர்ர வரை லைனுக்கே வராம சண்டித்தனம் பண்ணுவோ.

20.சாமுண்டேஸ்வர்யை
சாமுண்டன் ங்கற ராட்சனை போட்டு தள்ளியவளே

21.சந்திர மண்டல வாசின்யை
பால்வெளியில உள்ள சந்திரமண்டலத்துல இருப்பவளேன்னா அது ரெம்ப அற்பமா இருக்கும். ஹ்யூமன் பாடியில ஆண்களை பொருத்தவரை வலது பாகம் சூரிய மண்டலம், இடது பாகம் சந்திர மண்டலம். பெண்கள் விஷயத்துல இதுல உல்ட்டா.
ஆக ஒவ்வொரு பாடியில ஒரு பார்ட் ஆஃப் தி பாடியை கேப்சர் பண்ணி வச்சிருக்கிறவன்னு சொல்லலாம்.
ஆண்கள் தம் இடது  நாசியில் சுவாசம் நடக்கும் போது ஆத்தாவ தியானிக்கலாம். சுவாசத்தை அடுத்த பகத்துக்கு மாத்தற டெக்னிக் தெரிஞ்சவுகளுக்கு  பிரச்சினையே இல்லை.தூள் பண்ணுங்க.

22.சதுர் சஷ்டி கலாத்மிகா
சதுர் =4 , சஷ்டி =ஆறு நாலாறு 24 ஆ? 4+6 =10 ஆ? பண்டிதர்கள் ஆராவது க்ளாரிஃபை பண்ண கடவர்.. ஆக 24 /10 கலைகளின் ஆத்மாவாக இருப்பவளே

23.துர்காயை
துர்கா =கோட்டை , கோட்டைக்குள்ள எப்படி சேஃபா இருப்பமோ அப்படி ஆத்தா கஸ்டடிக்கு போய்ட்டா ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டில்லாம் தேவையே இல்லிங்ணா. பாதுகாப்பை தரும் கோட்டையே

24.தர்ம ரூப்பிண்யை
தர்மத்தின் வடிவானவள். தர்மம்னா நாலணா எட்டணா பிச்சை போடறது தர்மமில்லை. இந்து தர்மம்,புத்த தர்மம்னு வாய்ங்க அதெல்லாம் டுபுக்கு.கீதையில கிருஷ்ணர் சொல்றார் பாருங்க ஸ்வதர்மம்,பரதர்மம்னு அதை கூட என் மதம்,பிற மதம்னு அர்த்தப்படுத்திக்க கூடாது.
தர்மம்னா இயல்புன்னு அருத்தம். பள்ளத்தை நோக்கி பாய்வது ஜல தர்மம் . தலை கீழாய் பிடித்தாலும் மேல் நோக்கியே எரிவது நெருப்பின் தர்மம்.
ஆக உங்கள் இயல்பு எதுவோ அதுவாக இருப்பவளும் ஆத்தா தான்.

25.தேவ்யை
தேவனுக்கு பெண் பால் தேவி.