Thursday, July 21, 2016

கபாலி -ஒரு மகாபலி

அண்ணே வணக்கம்ணே !
கொய்யால ..ச்சும்மா வேடிக்கை பார்க்கலாம்னு ஓரமா நின்னா தேரை இழுத்து தெருவுல விட்டுர்ரானுங்கப்பு. ஸ்..யப்பா மிடியல .

வேற என்ன கபாலிக்கு நான் பலியான கதைதான்.ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி என்னன்னா படத்துல ரஜினி மட்டும் சொதப்பல .. டைரட்டரும் செமயா சொதப்பியிருக்காரு .

ராத்திரி பூரா சிவராத்திரி . துலாம் முதல் மீனம் வரை குரு பெயர்ச்சி பலன் எழுதிட்டு - பலன் டெக்ஸ்டா தான் வேணம்னு அடம் பிடிச்சு ஒப்புக்க வச்ச க்ளையண்டுக்கு பலன் அனுப்பிட்டு ஆஹா விடிஞ்சுருச்சா இனி தூங்கிர வேண்டியதுதான்னு படுத்தேன். பொறுக்கல !

அம்பதுக்கே ஃபர்ஸ்ட் மார்னிங் ஷோ ஆசைல்லாம் ஒடுங்கி கிடக்கம் நாம .60 வயசு செட்டியாருக்கு இளமை ஊஞ்சலாடுது . நேரம்டா. பாவம் ரஜினி !
ஓவராலா ஒரே வரியில சொல்லனும்னா கவர் பால வச்சு சுவத்துல கோடு கிழிச்சு விளையாடற பசங்களை டெஸ்ட் மேட்சுக்கு அனுப்பினாப்ல.

ரஜினிய பத்தி பெசலா சொல்லனும்னா பழைய ஞாபகத்துல பாட்டி மஞ்ச குளிச்சாளாம் கதைதான்.இந்த படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட் கொடுத்த கைக்கு குஷ்டம் தான் வரும் . எம்மாம் ரத்தம்?

கழுத்தறுக்கறதை எல்லாம் கமல் கிட்டருந்து சுட்டாப்ல இருக்கு . தூங்காவனம் த்ரிஷா ஞாபகத்துல மவ கேரக்டர் .

வளரும் கலைஞர்கள் யாரும் இந்த மாதிரி மெகா ப்ராஜக்ட்ல சிக்கவே கூடாது போல. அசிங்கப்பட்டான்டா ஆட்டோக்காரன். நெல்ல நெல்ல வளரும் பயிரை எல்லாம் கழுதை கணக்கா மேஞ்சிருக்கு கபாலி . உ.ம் தினேஷ், மெட்ராஸ் இளவரசன்

ரஜினி படம்னா வில்லங்கமில்லாம எப்பூடி?  தானும் தமிழன்ங்கற நெனப்புல பேசிட்டாப்ல இருக்கு. ஆயிரம் அவதூறு வழக்கு போடலாம் .அந்தளவுக்கு கயிவி கயிவி ஊத்திக்கிறாரு .

அதே போல ஆரோவில் ஆசிரமத்துல எவ்ள பெரிய ரத்தக்களறி? ஏற்கெனவே அது வில்லங்கத்துல சிக்கின ரெத்த பூமி.

ரஜினிய இளமையா காட்டறேனு செம சொதப்பல்.அச்சா லிங்கா தான்.  மிடியல. பொஞ்சாதிய பார்க்கபோற குஜிலில டை போட்ட ரஜினி கொஞ்சம் பரவால்ல.

ரஜினியோட ஃப்ளாஷ்பேக்கை கொடுத்த விதம் இருக்கே ..தூர்தர்ஷன் மலரும் நினைவுகள் ரேஞ்சுல இருக்கு .

நாசர் ஓவர் ஆக்டிங் பார்த்து ஏதோ பாரதிராஜா படம் /கமல் படம் மாதிரி இவர் தான் வில்லனோனு நினைச்சிட்டன். அவ்வ்வ்வ்வ்

ஈரோ செயில்ல இருந்து ரிலீஸ் ஆகறச்ச பறவை பறக்கறதை  காட்டறதை  1980 ல சர்தார் பாப்பாராயுடுலயே பார்த்துட்டம்.

சமீபத்துல நான் போட்ட ஸ்டேட்டஸ் பக்கா . பாட்சாவுல டான் பிறவு  ஆட்டோக்காரன் -பிறவு டான். இதுல டான் -பிறவு செயில் கைதி -மறுபடி டான்.

செத்துட்டானு நினைச்ச பொஞ்சாதிய அத்தீனி வருசத்துக்கு பிறவு சந்திக்கப்போறது தெரிஞ்சு ரஜினி உச்சா போக போயிர்ராரேனு பார்த்தா ஓன்னு  அழுவறாராம்.

ரிஷி மூலம் சோகம்லாம் ரஜினிக்கு ரத்த   மூலம் வந்தா கூட இம்பாசிபிள். டான் கதைதான் ஆனாலும் இழுக்குதேன்னு நினைச்சதும் கொய்யால இது இன்னாடா இழுவை இப்ப பாருடான்னு பொஞ்சாதிய தேடி போற எப்பிசோட்.
க்ளைமேக்ஸ்  கிட்டே தெலுங்கு படம்லாம் பிச்சை எடுக்கனும். ரெண்டு துப்பாக்கி /மிஷின் கன்.. அய்யோ.. வேண்டான்டா சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

ரஞ்சித் அந்த அரசியலை முன்னெடுப்பார் இந்த அரசியலை முன்னெடுப்பாருன்னு பீசிக்கிட்டாய்ங்களே இந்த படத்தோட ஊஊஊஊஊஊஊஊஊ சங்குதான் போல .

பா.ஜ.க அம்பேத்கர் காந்திய ஓன் பண்ண பார்க்கிறதுக்கும் இந்த படத்துல ரஜினி செய்ற வேலைக்கும் எதுனா வித்யாசம் இருக்கா என்ன?
சந்தேகத்துக்கு இடமில்லாம யோகா க்ளாஸ் வேற.போதும் பாஸ் ! இதோட இதை முடிச்சுக்கறேன். இப்பமே ரஜினி ரசிகர்கள்ளாம் செமகடுப்புல இருப்பாய்ங்க..

ரஞ்சித்துக்கு ஷொட்டு:

மாணவர்கள் கையில் அணியும் பேண்டுகளை சுட்டியமை
ரஜினி -மனைவியை சந்திக்கும் காட்சியை ப்ளர்ரா காட்டினது  இப்படி சின்ன சின்னதா நிறைய செய்திருக்காரு .ஆனால் ....................