Wednesday, September 14, 2016

ஆசைகளின் மூலம்

அண்ணே வணக்கம்ணே !

உலக துன்பங்களுக்கு ஆசையே காரணம்னு புத்தர் சொன்னார். எந்த பிரச்சினையா இருந்தாலும் அதனோட மூலம் என்னன்னு தெரியாம தீர்த்து வைக்கவே முடியாது .இந்த பதிவுல ஆசைகளின் மூலம் என்னனு சொல்லப்போறேன்.

ஆசை  வெட்கமறியாது ! காமாதுரானாம் நா பயம் நா லஜ்ஜானு சொல்லியிருக்காங்க. அதாவது காம வயப்பட்டவனுக்கு பயமோ வெட்கமோ இருக்காதாம். காமம்ங்கறது உயிரின் அடிப்படை -அடி நாதம். அதை நாம என்னைக்குமே எதிர்த்ததில்லை. இன்னம் சொல்லப்போனா பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதியே வழங்கிரனுங்கறதுதான் நம்ம ஸ்டாண்ட். அதை விடுங்க..

காமம்ங்கற வார்த்தைக்கு வெறுமனே செக்ஸ் மட்டும் பொருளில்லை . ஆசைகளும் தான். ஆசைன்னா ஸ்பைஸ் வச்சுக்கறதுலருந்து - ஏரியாவுக்கு ஒரு ஃப்ளாட் வாங்கறது வரை ஆசைதான். "அந்த"ஆசை தீராத சன்மங்க தான் /அதுக்கு குவாலிஃபைடா இல்லாத சனம் தான்/ அதுக்கான வேலிட்டிட்டி தீர்ந்து போன சன்மங்க தான் இப்படி அலையுதுங்கறதுதான் என் ஹஞ்ச்.

நம்ம ஆசைகளை எல்லாம் 3 கேட்டகிரியா பிரிச்சுக்கலாம் மொத கேட்டகிரி  "அதுக்கு" ப்ரிப்பேர் ஆறதுக்குண்டா ஏற்பாடுகள் (கல்வி/வேலை /சம்பளம்/ஃப்ளாட்/க்யாஸ் சிலிண்டர்) . அடுத்தது அது கிடைச்ச பிறவு பலகீனமடையும் உடலுக்கு/மனசுக்கு  ஒத்தாசையா /இதம்மா சில ஏற்பாடுகள். அடுத்த கேட்டகிரியில தான் அவலை நினைச்சு உரலை இடிக்கிற காரியங்கள்ளாம் வருது .

இதுல உள்ள சோகம் என்னடான்னா எந்தவித ப்ரிப்பிரேஷனும் இல்லாம இயற்கை ஒரு கொடை போல /பம்பர் பரிசு போல செக்ஸ் பவரை கொடுத்திருக்கு .அது பொங்கி சீறும் போது வடிகால் கிடையாது . காளை மாட்டுக்கு புல்லை காட்டி ரேக்கி விட்டே வேலை வாங்கறாப்ல படிப்பை முடிச்சாச்சுன்னா வேலை -வேலை கிடைச்சதுமே பலாந்து பலாந்துனு குடும்பம்/சமூகம் எல்லாமே ட்ரில் வாங்குது .

எப்ப இவன் குவாலிஃபைட் ஆகிறானோ அதுக்குள்ளயே இயற்கை தன் கொடையை அளந்து கொடுக்க ஆரம்பிச்சிருது . இவன் எதுக்கு குவாலிஃபைடாகனும்னு ஒர்க் அவுட் பண்ணானோ அந்த ஒர்க் அவுட்லாம் சேர்ந்து அந்த அசலான மேட்டருக்கே ஆப்பு வச்சிருது .

இப்ப அந்த அசலான மேட்டர்ல உள்ள டெஃப்சிட்டை ஈடு கட்ட என்னென்ன இழவையோ இட்டு கட்ட வேண்டியதாயிருது. ஒரு கட்டத்துல ஈடு கட்டவே முடியாதுங்கற தெளிவு வந்தோன்ன இவரு வேட்டைக்கு புறப்படுறாரு. தங்க வேட்டை /பண வேட்டை .ஜஸ்ட் எஸ்கேப்பிசம்.

யதார்த்தம் என்னன்னா பலான மேட்டரு மட்டும் பக்காவா இருந்தா எந்த டெக்கரெஷனும் தேவையில்லை. பலான மேட்டரு புட்டுக்குச்சின்னா எந்த டெக்கரேஷனும் ஒர்க் அவுட் ஆகாது.

பொஞ்சாதிக்கு செக்ஸ் கொடுக்க முடியாதவன் அவ பெத்ததுக்கு சொத்து சேர்க்கறதா பம்மாத்து பண்றான். என்னா லாஜிக்கு?

ஆசைகளின் சில்லி வேரை பிடிச்சுக்கிட்டு சில்லியா ஜல்லியடிச்சுக்கிட்டிருந்தா ஆசைகளுக்கு முடிவே இல்லை .
ஆசையோட ஆணி வேரை கெல்லி எடுத்து பார்த்தாச்சுன்னா ஆசைகளுக்கு அர்த்தமே இல்லை ..